கஜா புயல் நிவாரனப் பொருட்களை கோவை மாவட்டம் சார்பில் அனுப்ப மாவட்ட ஆட்சி தலைவர் வழிவகை

சமீபத்தில் கஜா புயல் ஏற்படுத்திய சேதத்தினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் புயல் நிவாரனப் பொருட்கள் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மூலமாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களால் இயன்ற அளவு நிவாரன பொருட்களை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம், கோயம்புத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள வெள்ள நிவாரன பொருட்கள் சேகரிக்கும் இடத்தில் ஒப்படைக்க கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். 0422 2300712

Related posts

Leave a Comment